உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா களமிறக்கவுள்ளது.! – அந்நாட்டு சுகாதாரத்தை அமைச்சர் தகவல்.!

ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். – ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் வேலைகள் பல்வேறு நாடுகளில் பல கட்டங்களாக விரிவடைந்து வருகிறது. இதில் யார் முதலில் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை களமிறக்க உள்ளார்கள் என உலகமே எதிர்நோக்கி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த காமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்தை மனித சோதனைக்காக உட்படுத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ கூறுகையில், ‘ ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். தடுப்பூசி தயாரிப்பதற்கான செலவு நாட்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும். தடுப்பு மருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.