லெபனான் நாட்டில் நிகழ்ந்த வெடிவிபத்து! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

லெபனான் நாட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை.

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியதால் அங்கு மிக பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் யுத்த களத்தை விட அகோரமாக காட்சியளிக்கிறது. எங்கு திரும்பினாலும், அழுகுரல் சத்தம் கேட்ட வண்ணமாக உள்ளது.

வானுயர இருந்த கட்டிடங்கள் அனைத்தும் கற்குவியல்களாக மாறி, தரைமட்டமாக காட்சியளிக்கிறது. இந்த விபத்தில் 4,000-க்கும்  காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் போது காணாமல் போன உறவினர்களை தேடி ஒவ்வொரு மருத்துவமனையாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிறைந்து வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.