நீட் தேர்வு குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும் – அன்புமணி

நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியதா? என்பது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மருத்துவ படிப்பின் தரத்தை நீட் தேர்வு உயர்த்தும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்க படுவதை தடுக்கும் என்பன அழகாக சித்தரிக்கப்பட்ட அபத்தங்கள்.
நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியதா? என்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்  என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.