அணுக்கழிவு மையம் குறித்து தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகின்றன -தமிழிசை

அணுக்கழிவு மையம் குறித்து தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகின்றன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றினாலே குடிநீர் பஞ்சம் தீரும் .தொலைநோக்கு திட்டத்துடன் காங்கிரஸ் – திமுக செயல்பட்டிருந்தாலே குடிநீர் பஞ்சம் வந்திருக்காது.
அணுக்கழிவு மையம் குறித்து தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகின்றன.தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என ஆரம்பிப்பது நல்லதல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.