இது கட்சியின் கொள்கை முடிவு, தனிநபர் முடிவு அல்ல – அமைச்சர் ஜெயக்குமார்.!

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும் என்றும் இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து
ரஜினி – கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மார்ச் 6ம் தேதியன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும்    வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 13ம் தேதி என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்