உள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு.!

  • வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து உள்ளார்.
  • இந்த வழக்கை வருகின்ற திங்கள் கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து உள்ளார். பல்வேறு இடங்களில் அதிமுக முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் வந்த நிலையில் வாக்கு பெட்டிகளில் முறைகேடு செய்யாமல் இருக்க அவற்றை பாதுகாக்க வேண்டும் என ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என திமுக கூறியுள்ளது.வாக்கு எண்ணிக்கையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும் என ஆர் எஸ் பாரதி கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும்  திமுக கோரிக்கையின்படி தேர்தல் ஆணையம் , போலீசார் உள்ளிட்டோர் உரிய உத்தரவிட வேண்டும் என மனு கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த வழக்கை வருகின்ற திங்கள் கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

author avatar
murugan