தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு!13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாட்டில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு தெரிவித்தார்.அதில் தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடியிலும், தேனியில் 2 வாக்குச்சாவடியிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

தற்போது தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

பூந்தமல்லி மேட்டுப்பாளையத்தில் 195ம் எண் வாக்குச்சாவடி, தர்மபுரி அய்யம்பட்டியில் 181, 182ம் எண் வாக்குச்சாவடி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.பண்ருட்டி திருவாதிக்கல் 210ம் எண் வாக்குச்சாவடி, காங்கேயம் திருமங்கலத்தில் 248ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆண்டிப்பட்டி பாலசமுத்திரத்தில் 67ம் எண் வாக்குச்சாவடி, பெரியகுளம் வடுகபட்டியில் 197ம் எண் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு  நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment