குடிபோதையில் காரை ஒட்டிய இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய மக்கள்..!

  • ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பொன்மணி ராதா என்பவர் மீது சொகுசு கார் மோதியது.
  • குடிபோதையில் காவல் ஆய்வாளராக வேலைசெய்யும் சேதுபதி என்பவர் மோதியது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளை  கிராமத்தை சேர்ந்த பொன்மணி ராதா .  இவர் ஆரணி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் ஒன்று பொன்மணி ராதா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பொன்மணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சொகுசு காரை ஒட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவர பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பொதுமக்கள், அவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்வாளராக வேலைசெய்யும் சேதுபதி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீசார் காவல் ஆய்வாளர் சேதுபதியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

author avatar
murugan