புரட்டாசி மாதத்தில் இந்த காரியங்கள் எல்லாம் செய்ய கூடாதாம் !

புரட்டாசி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளை செய்ய கூடாது என்று பெரியவர்கள் பலரும் கூறுவார்கள்.இந்த மாதத்தில் இந்து மதத்தினரை தவிர மற்றவர்கள் சுப காரியங்களை செய்து வருகிறார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் செய்யலாம்.

அந்த மாதங்களில் செய்தால்  அந்த சுபகாரியம் தடையில்லாமல் நடக்கும்.மேலும் ஆடி , புரட்டாசி, மார்கழி  முதலிய மாதங்களில் திருமணம் சுபகாரியங்கள் செய்ய கூடாது.

இந்த மாதம் ஒற்றை படையாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தலாம். மேலும் புரட்டாசி மாதம் பிறந்தவர்க்ளுக்கு அறுபதாம் கல்யாணம் மற்றும் என்பதாம் கல்யாணம் நடை  பெறுவதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

மேலும் புரட்டாசி மாதத்தில் வீடு கட்ட வாஸ்து செய்ய கூடாது. இந்த மாதத்தில் வாஸ்து பகவான் உறங்கி கொண்டிருப்பார்.எனவே இந்த மாதத்தில் வீடு கட்டும் வேலைகளை ஆரம்பிக்கவும் கூடாது மற்றும் வடக்கை வீடாக இருந்ததாலும் பால் காய்ச்சி குடிபோக கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த மாதத்தில் கடைசி நாளான விஜயதசமி நாளில் கல்விக்கு கற்று தொடங்கினால் மிகவும் நல்லது.புதிய தொழில் தொடங்கலாம். அது மேன்மேலும் வளரும்.