திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தூண்டி விடுவதாக விளம்பரத்துறை அமைச்சர் பேச்சு.!

  • தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
  • அப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாக்கு சேகரித்து வந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு பயந்து திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்