சக இராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி ! காட்டு தீ போல பரவும் வீடியோ !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை தொடருக்கு பின்  ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது .ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்கவில்லை.இதனால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பலர் ஓய்வை அறிவிக்கவும் , அறிவிக்க கூடாது என கூறி வந்தனர்.

இந்நிலையில் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு அனுமதி கிடைத்ததால் தோனி பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு பின் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.இம்மாதம் 15 -ம் தேதி வரை ரோந்து பணியில் ஈடுபடுவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தோனி சக இராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ ஓன்று வெளியானது.இந்த வீடியோ ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வருகிறது.

author avatar
murugan