80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி! ஆட்டநாயகன் விருதை வென்றார் தல தோனி!

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, களமிறங்கிய, ஷேன் வாட்சன் 0 ரன்னில் அவுட் ஆக, , ஃபாப் டு பிளெசிஸ் 39 ரன்களும் , , சுரேஷ் ரெய்னா 59 ரன்களும் , ஜடேஜா 25 ரன்களும் அடித்து அவுட் ஆக கடைசியாக அம்பதி ராயுடு 5 ரன்களுடனும் , எம்.எஸ் தோனி (கேப்டன்) 44 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 அடித்தது. 20 ஓவரில் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி.

டெல்லி அணி சார்பாக, ஷ்ரேயஸ் அய்யர் 44 ரன்களும் , ஷிகர் தவான் 19 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும் அவர்களை தவிர களமிறங்கிய அனைவரும் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேற 16.1 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது. ஆட்டநாயகன் விருதை கேப்டன் தோனி பெற்றுக்கொண்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment