கொவிட்-19: தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தகவல்.! சீனா சற்று நிம்மதி.!

  • சீனாவில் வுகான் நகரத்தில் கண்டறிந்த கொவிட்-19 வைரஸ் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் முந்தைய நிலைமையை விட சற்று குறைந்துள்ளது என தகவல் வந்துள்ளது.

உலக நாடுகளில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணபடுகிறது சீனா. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) வரை சீனாவில் 114 பேர் புதிதாக உயிரிழந்து, நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 394 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் நாடு முழுவது 1,749 பேர்களை விட குறைவு என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது என தேசிய சுகாதாரத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே ஹுபெய் மாகாணம் மற்றும் வுகான் நகரில் தொடர்ந்து 16 நாட்களில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேற்று 1,739 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வீடு திரும்பி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் சீனா அரசு சற்று நிம்மதி அடைந்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்