கொரோனா தொற்று பரவல்… மும்பை தாராவியில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…. அச்சத்தில் அப்பகுதி மக்கள்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,547 பேரிலிருந்து 2,902 பேராக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி  மகாராஷ்டிரா மாநிலத்தில் 537 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
 மகாராஷ்டிராவில் தற்போது புதிதாக 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக  மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் என தலா ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த மாநிலத்தின் தமிழர்கள் அதிகம் வாழும்  தாராவி பகுதியை சேர்ந்த ஆண், பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது  5 ஆக உயர்ந்துள்ளது. 
author avatar
Kaliraj