#முக்கிய அறிவிப்பு#:மார்ச.,24 டெல்லி To சென்னை..விமானத்தில் பயணித்தவர்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு!

உலகளவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதுவரை உலகளவில் 12 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.அவ்வாறு தமிழகத்தில் 480க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்;4 வர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் மார்ச் 24-ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்கள் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்  என்று சென்னை மாநகராட்சி அறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha