பாகிஸ்தானில் வெளியுறவு அமைச்சரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா.!

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியான நிலையில் தற்போது  பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்சா கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், நான் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.மேலும்,  அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன என மிர்சா தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதத்தில், தேசிய சட்டமன்ற உறுப்பினர் முனீர் கான் ஓராக்ஸாய் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். க்பர் பகுன்க்வா சட்டமன்றத்தின் எட்டு உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கைசருக்கும்  கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர், சபாநாயகர் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் இதுவரை கொரோனாவால் 231,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  131,649 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும், 4,762 பேர் உயிரிழந்துள்ளனர்

author avatar
murugan