தனி விமானத்தில் தனியாக சீனாவிலிருந்து சென்னைக்கு வந்த மாணவி.. இதுதான் காரணம்..!

சினாவில் உள்ள வுஹான் நகரத்தில் முதல் முதலில் டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ். இதுவரை 259 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 259 பேர் பலியாகினர்.  மேலும், 11,791 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை சேர்ந்த வேலம் எனும் மாணவி, சீனாவில் உள்ள டியான்ஜின் எனும் மாகாணத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகாமானதால் அவரின் பெற்றோர் அவரை இந்தியாவுக்கு திரும்பி வருமாறு கூறியுள்ளனர். பல்வேறு விமான நிறுவனம் சீனாவுக்கு விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த மாணவி, டியான்ஜிலீருந்து சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் முறையான பரிசோதனைக்கு பின்பே அவர் இந்தியாவுக்கு வந்தாக கூறினார். மேலும், அந்த விமானத்தில் அவர் மட்டும் பயணித்தார். இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.