ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் பலி !

ராணுவத்தை குறிவைத்த கொரோனா ! சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

டெல்லியில் நேற்று (ஏப்.28) ஒரே நாளில் 12 சி.ஆர்.பி.எஃப் ஜவான்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் ஜவான்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். 31-வது பட்டாலியன் படைப்பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்த நிலையில் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ராணுவத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும்.

author avatar
Vidhusan