குஜராத் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு கொரோனா.!

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை குஜராத்தில் 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
அம்மாநிலத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஹாடியா ஜமால்பூர் தொகுதி எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவாலாவும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், பங்கேற்ற பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா உறுதியானது.
இதனால், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவி இருக்குமோ என அச்சம் நிலவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.