கொரோனா தடுப்பு பணி- நோய் எதிர்ப்பு மருந்து வழங்க உத்தரவு

நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை உள்ளிட்டவை  சுகாதார பணியாளர்களுக்கு  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும்  நிலையில் சுகாதாரத்துறையினர் ,போலீசார் உள்ளிட்டோர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பணியில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க வேண்டும் . வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க வேண்டும் . மேலும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.