அமெரிக்காவில் மீண்டும் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் மீண்டும் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பலி எண்ணிக்கை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள், இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,485,571 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 382,412 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இதுவரை அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தால், 1,881,205 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108,059 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்தால், 1,134 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக அங்கு பலி எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.