பிரசாரத்தின் போது கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி !

ஹரியானாவில் சட்டசபை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் வழியில் இருந்த தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிரக்கப்பட்டது.
அந்த மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதை கண்ட ராகுல் காந்தி மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…

author avatar
Vidhusan