சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது – ராஜ்நாத் சிங்

சீனா 38,000 சதுர கி.மீ. பகுதியையும் ,பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது என்று  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  மாநிலங்களவையில்  பேசினார்.அவர் பேசுகையில், இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.லடாக் பகுதியில்  38,000 சதுர கி.மீ.  நிலத்தை சீனா கையகப்படுத்தி உள்ளது. அருணாசலப்பிரதேசத்தில் உள்ள எல்லையில் 90,000 சதுர கி.மீ. பரப்புக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

எல்லை பகுதியில் பாகிஸ்தான் 5,180 சதுர கி.மீ. பரப்பை ஆக்கிரமித்துள்ளது.இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்.எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.  எல்லையில் சீனப்படைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.