மருத்துவ குழுக்களுடன் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் விளைவாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கொரோனாவின் நிலை, தடுக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இதற்கு இடையில் நேற்று தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில் இன்று மருத்துவ குழுக்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.