டி.என்.சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இறங்கல்..!

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று இரவு அகால மரணமடைந்தார்.இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் , அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சேஷன் இல்லத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, தமாகா தலைவர் வாசன் , திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கல் தெரிவித்தார்.அதில்   “சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளியான டி.என்.சேஷன் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்டவர் ” என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கல் தெரிவித்தார்

author avatar
murugan