12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் விளைவாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகி வரும்  நிலையில் கொரோனாவின் நிலை, தடுக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.