தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்த முதலமைச்சர்

தமிழக ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்  முதலமைச்சர் பழனிசாமி .

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் கொரோனா  பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.