இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டர்வர்களில் 17 மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 1023 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 30 சதவீதத்தினர் இருக்கின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.