இரண்டு ஆண்டுகளுக்கு பின் சீமான் மீது வழக்கு.!

2018-ம் ஆண்டு காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு கிண்டி காமராஜர் நினைவு மண்டபத்தில் மரியாதையை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சீமானின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், இதையடுத்து சீமான் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுக்கு பிறகு, சீமானின் பேச்சு இருபிரிவினர்களுக்கிடையே அமையதியை சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவலை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தற்போது சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்