பிரிஸ்பேன் டென்னிஸ்சில் ஆட்டத்தின் நடுவே சுருண்டு விழுந்தார் முருகுஷா!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  சர்வதேச மகளீர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.இதில்  உலக டென்னிஸ் வீராங்கனைகளில் இரண்டாம் இடத்தில் உள்ள கேப்ரின் முகுருசா பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் போது காலில் சுளுக்கு ஏற்பட்டதையடுத்து தரையில் விழுந்தார். செர்பிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா குருனிக்குடன் மோதிய அவர் 5க்கு 2 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது, காலில் ஏற்பட்ட பாதிப்பால் திடீரென சுருண்டு விழுந்தார்.
மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சையளித்து அழைத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது இரண்டு கால்களிலும் மிக அரிதாக பாதிப்பு ஏற்பட்டதை அவர் விளக்கினார்.இதனால் போட்டிக்களத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
source: dinasuvadu.com

Leave a Comment