சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.அண்ணா மேம்பாலத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் . நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் கார் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.