ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் மற்றும் வருமான வரிக்கணக்குடன் இணைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…

டெல்லி :மத்திய அரசு மக்கள் அனைவரும்  வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் மற்றும் வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கவேண்டும் என அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கல்யாணி மேனன் என்ற சமூக ஆர்வலர்  புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார் .

அந்த மனுவில் மக்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பயோ மெட்ரிக் முறை மூலம் தெரிவிக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்க இயலாமல் போய்விடக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்யாணி மேனன்  வங்கிக்கணக்கும் தொலைபேசி எண்ணும் ஒருவருடைய தனிப்பட்ட உடைமை என்றும் கூறியுள்ளார்.

  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment