பகத்சிங் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய போராட்ட நிகழ்வு ..!

பகத்சிங்கின் சில முக்கிய நிகழ்வுகளை இந்த குறிப்பில் பார்ப்போம்…

பகத்சிங் ஆரம்பம்: 

பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட  குடும்பம் என்பதால்,பகத்சிங்  இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார்.பக்த்சிங் லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார்.இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு, ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு ஓட்டுமொத்த நாடே கொதித்தது.இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

விடுதலைப் போரில் முக்கிய பங்கு வகித்த  பகத்சிங்:

பகத்சிங் தன்னுடைய 13 வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.கோரக்பூரீல் 1922 ஆம் ஆண்டு நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிய  ஏமாற்றம் அடைந்தார். ‘அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார். சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார்.“நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை 1926 ஆம்  ஆண்டு  பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் ஆகியோர்  இணைந்து  நிறுவினார்கள்.

கைது செய்யப்பட்ட பக்த்சிங்: 

“சைமன் கமிஷனை” எதிர்த்து 1928 ஆம் ஆண்டு  காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் காவல்த்துறைதாக்குதலில் இறந்தார். இதனால் கோபம்முற்ற பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர். அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. பகத்சிங் இச்சட்ட வரைவை ஏற்காத நிலையில் “பாராளுமன்றத்தில் ” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார்.இச்சட்ட வரைவு 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

பின் அவர் செய்த குற்றத்திற்காக  24-வது வயதில் 1931 ஆம் ஆண்டு  மார்ச் 23 ஆம் தேதி  தூக்கிலிடப்பட்டார்.

Leave a Comment