அந்த ஒரு நொடி பொழுதே காரணம்! காஜல் அகர்வால் அதிரடி!

என் சகாக்களின் அகால இழப்பை விவரிக்க முடியாது.

இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காஜல் அகர்வால்  கூறுகையில், ‘ படப்பிடிப்பு தளத்தில், நடந்த கிரேன் விபத்து  அளிக்கிறது. தற்போது உயிருடன் இருக்கவும், இந்த பதிவை பதிவிடவும் அந்த ஒரு நொடி பொழுதே காரணம்.  என் சகாக்களின் அகால இழப்பை விவரிக்க முடியாது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.’  என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.