பேட்மிண்டன் போட்டியில்…!! இந்திய ஆண்கள் அணியும் தங்கத்தை தட்டியது…!!!

பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதன் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்திய அணியில் சாத்விக் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவிலும், ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும் வெற்றி கண்டனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டது. தோல்வி கண்ட மலேசியா அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலக்கில் சிங்கப்பூரை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment