ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே  4 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர், திருப்பதி ஏழுமலையான் கோயில் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். சித்தூர் – திருப்பதி நெடுஞ்சாலையில் மாதவன் தோப்பு அருகே சென்றபோது, பக்தர்கள் சென்ற கார் கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர் திசையில் வந்த பேருந்து மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment