ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்.. பொதுமக்கள், தலிபான் உட்பட 45 பேர் உயிரிழப்பு.!

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக கூறப்படுகிறது.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான ஹெராட்டில் உள்ள அட்ராஸ்கன் மாவட்ட ஆளுநர் அலி அஹ்மத் பகீர் யர் கூறுகையில், காம் சியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இதுவரை நாற்பத்தைந்து பேர் உயிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தலிபான்களும் அடங்குவர் என்று அவர் கூறினார்.

இறந்தவர்களில் குறைந்தது எட்டு பொதுமக்கள் உள்ளதாகவும் மீதமுள்ள 37 பேரில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் தலிபான் உறுப்பினர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறினார். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் ஆப்கானிய படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

விசாரணையின் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுடன் கூறப்படும் எனவும், மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் இந்த வான்வழித் தாக்குதல்களில் தங்கள் பங்கேற்கவில்லை என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan