மும்பையில் விபசார தொழில் செய்த நடிகை கைது.!

  • மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
  • பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்தி நடிகை அம்ரிதா தனோவா ,மாடல் அழகி ரிச்சாசிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு போலீசார் கைது செய்தனர்.

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த நட்சத்திர விடுதிக்கு போலி வாடிக்கையாளரை அனுப்பினார். அதில் அங்கு விபசாரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் அந்த நட்சத்திர ஹோட்டலில் சென்று அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களை மீட்டனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்தி நடிகை அம்ரிதா தனோவா ,மாடல் அழகி ரிச்சாசிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு போலீசார் கைது செய்தனர்.

கைதான நடிகை தனோவா சில இந்தி படங்களில் நடித்துள்ளார். விபச்சாரத் தொழில் செய்து வந்ததாக ஒரு நடிகை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
murugan