ஆன்மிக ஆக்சன் நிறைந்த கதையில் களமிறங்கும் நடிகர் விஷால்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒருபுதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படமானது இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த நாவலை படித்த சமுத்திரக்கனி, இந்த கதைக்கு நடிகர் விஷால் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, அவரிடம் கதையை கூறியுள்ளார். நடிகர் விஷாலுக்கும் இந்த கதை பிடித்துள்ளது.

இதனையடுத்தது, இந்த கதையை திரைப்படமாக்க உரிமையை பெற்றுள்ளார் சமுத்திரக்கனி. இந்த திரைப்படம், ஆன்மிக ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.