மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்படும் கால அவகாசம்! ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு!

வருமான வரித்துறை அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதாவது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் ஆனது மார்ச் 31 என குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அதாவது நாளை கடைசி நாள் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

அப்படி இணைக்க தவறும் பட்சத்தில் பான் எண்ஆனது காலாவதி ஆகிவிடும். எனவே புதிய பான் எண்ணை விண்ணப்பித்து அதன் பின்னர்தான் வருமான வரித்துறையிடம் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க முடியும் என செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் தற்போது மீண்டும் ஆதார் எண்ணை உடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி தேதி என தற்போது நேரடி வரித்துறை அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.