இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நாய்! வைரல் புகைப்படம்..!

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவதால் பலர் தற்போது விதிமீறல் குறைந்து காணப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 2 லட்ச  வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் என்னவென்றால் ” டெல்லியில் நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் தான்” இந்த புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்சு குப்தா தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பதிவிட்டு உள்ளார். தற்போது  அந்தப் புகைப்படம் இணைதளத்தில் பரவி வருகிறது.

author avatar
murugan