பாரிஸ் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி….!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரிஸின் எர்லாங்கர் சாலையில் 8 தளங்கள் கொண்ட கட்டிடம் உள்ளது. இங்கு நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8 வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து வெளியேறினர்.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் படுகாயம் அடைந்த 30 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment