டென்மார்க்கில் சரக்கு ரயில், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் பலி…!

டென்மார்க்கில் சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

டென்மார்க்கில் உள்ள ஜியா தீவிற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரயில் மேம்பாலத்தில் குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் வந்தது. அப்போது எதிரே வந்த பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பயணிகள் ரயிலில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சரக்கு ரயிலின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக டென்மார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment