ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று  ஹாரியானா மாநிலத்தில்  ஹர்சிங்புரா  என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்தார். இந்த சிறுமியை மீட்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.சிறுமியை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் 18 மணி நேர போராட்டத்தில் சிறுமியை உயிருடன் மீட்க முடியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள திருச்சியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.