'நாங்கள் செய்த இந்த தவறால் தோற்றுவிட்டோம்' – கேப்டன் ரோஹித் ஷர்மா!

'நாங்கள் செய்த இந்த தவறால் தோற்றுவிட்டோம்' – கேப்டன் ரோஹித் ஷர்மா!

நேற்று வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து. இந்த இலக்கை வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ‘ வங்கதேச அணி நாங்கள் பேட்டிங் செய்த தொடங்கிய முதல் அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால், எங்களால் 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது தடுக்க கூடிய இலக்குதான். ஆனால், பீல்டிங் போது நாங்கள் செய்த தவறினால் தோல்வியை தழுவினோம்’ என குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube