தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா.! 5 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. உயிரிழப்பின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,674 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,108 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 310 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. இன்று 359 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 3,03,104 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 11,672 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 434 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 434 பேரில் ஆண்கள் 253 பேர், பெண்கள் 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 7,435 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட 434 பேரில் 49 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்