பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 54,000 கேள்வி தொகுப்பு 15 நாட்களில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம்  வகுப்பு மாணவர்களுக்கென ரேங்க் சிஸ்டம் கொண்டு வந்தது,பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு முறையை கொண்டு வந்தது என புதுமையான முயற்சிகளை பள்ளிக்கல்விதுறை தொடர்ச்சியான முறையில் எடுத்து வருவது குறுப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan

Leave a Comment