கேரளாவில் கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்த 28 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

கேரளாவில் கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்த 28 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள பாடியூர் நகரைச் சேர்ந்த கே.பி. சுனில் என்பவர், கலால் துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 28. 

இந்நிலையில், இவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். இது கேரளாவில் COVID-19 காரணமாக கொமொர்பிடிடிஸ் இல்லாத இறந்த முதல் நபர் ஆவார். சுனிலுக்கு நிமோனியா இருந்ததால், இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். சோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில், இவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.