பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய வகை செயற்கைகோள்களுடன் வருகின்ற 27-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
1,625 கிலோ எடை கொண்டது கார்டோசாட் -3 செயற்கைக்கோள்.புவி கண்காணிப்பு, பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவவுள்ளது இந்த செயற்கைகோள்.இந்த நிலையில் இன்று பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது.