பட வாய்ப்பு வரல…….பாலியல் வாய்ப்பு தா வருது……கடுப்பாகி பகீரங்கமாக பகிர்ந்த நடிகை…!!

பட வாய்ப்புகளை தவிர பாலியல் மிரட்டலகளே அதிகமாக வருகிறது என்று நடிகை பார்வதி பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
Related image
மலையாள சினிமாவில் வலம் வந்த நடிகை பார்வதி இவர் தமிழில் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் மலையாள சினிமாவை பதற வைத்த சம்பவமான பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜமீனிலில் வெளியே வந்தார்.திலீப்புக்கு எதிராக மலையாள நடிகைகள் களமிரங்கினர்.
Image result for dilip malayalam actor
 
அந்த வகையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை பார்வதி  நடிகர் திலீப்புக்கு எதிராக தனது கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலையும் கண்டித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மலையாள திரைப்பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Related imageஇந்த நிலையில் சமீபத்தில் நடிகை பார்வதி அளித்த பேட்டி ஒன்றில், “நடிகைகளின் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதற்குப் பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைக்கிறார்கள். மலையாள திரைப்பட உலகில் கதாநாயகர்களை கடவுளாக பார்க்கின்றனர் ஆனால் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கின்றன.
சமூகவலைதளங்களில் அவர்கள் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். இதனால் தினமும் பயத்திலேயே இருக்கிறோம். நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்தபோதும் எனக்கு கடந்த ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று நடிகை பார்வதி கூறியுள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment